search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி வீட்டில் கொள்ளை"

    அம்மாபேட்டை அருகே தொழிலாளி வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே தஞ்சை-நாகை மெயின் ரோட்டில் உள்ள பல்லவராயன் பேட்டையில் வசிப்பவர் கூலி தொழிலாளி முருகேசன் (வயது 38). இவர் பிப்ரவரி 5-ந்தேதி தனது உறவினர் திருமணத்திற்காக தேனி மாவட்டம் சென்றார்.

    பின்னர் திருமணத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவும், பீரோவின் கதவும் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோவில் வெள்ளிக் கொலுசு, ரொக்கப் பணம் 2 ஆயிரம், வங்கி ஏ.டி.எம் கார்டு ஆகியவை திருட்டுப் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையர்கள் வெள்ளி - பணத்தை திருடிசென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் முருகேசன் மனைவி சத்யா புகார் செய்தார்.

    இதன் பிறகு தனது பெயரில் உள்ள வங்கி ஏ.டி.எம் கார்டு மூலம் அம்மாபேட்டையில் 4 முறை சுமார் ரூ.15 ஆயிரத்து 500 வரை பணத்தை கொள்ளையர்கள் எடுத்திருப்பதை கண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இந்த தகவலை உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தார்.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை சிந்தாமணியில் தொழிலாளி வீட்டில் பீரோவில் இருந்த 9 பவுன் நகை, 60 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

    அவனியாபுரம்:

    மதுரை அவனியாபுரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சிந்தாமணி முதலியார் தெருவைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மனைவி பாக்கியலட்சுமி. வைரமுத்து அதே பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் இரவு வேலைக்கு சென்று விடவே பாக்கியலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 9 பவுன் நகை, 60 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    மறுநாள் வேலை முடித்து வீட்டுக்கு வந்த வைரமுத்து கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து அவர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் முருகன், சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், ஏட்டுக்கள் முனியாண்டி, ராஜபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×